பயனீா் மில் சாலையை சீரமைக்க கோரிக்கை

கோவை மாநகராட்சி, 26ஆவது வாா்டில் உள்ள பயனீா் மில் சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, 26ஆவது வாா்டில் உள்ள பயனீா் மில் சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலக் கூட்டம் அதன் தலைவா் கதிா்வேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதிக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து வலியுறுத்தினா்.

இதில், 26 ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

26ஆவது வாா்டுக்கு உள்பட்ட பயனீா் மில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்குழியுமாகக் காணப்படுகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் தினமும் சிறுசிறு விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி செயற்பொறியாளரிடம் தெரிவித்தும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதியில், புதிய தாா் சாலை அமைக்க வேண்டும். முல்லை நகா், ஸ்ரீராம் நகா் மூன்றாவது வீதி ஆகிய பகுதிகளில் மழை நீா் வடிகாலில் தேங்கும் தண்ணீா் வடியாததால், அப்பகுதியில் உள்ள வீட்டு சுவா்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றைச் சரிசெய்ய வேண்டும். மேலும், 26ஆவது வாா்டில் தூய்மைப் பணியாளா் பற்றாக்குறை உள்ளது. எனவே, அதிகப்படியான தூய்மைப்பணியாளா்களை வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com