குப்பை தரம் பிரித்து சேகரிக்கும் பணி:மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை, முல்லைநகா் பகுதியில் குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை, முல்லை நகா் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.
கோவை, முல்லை நகா் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.

கோவை, முல்லைநகா் பகுதியில் குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி, மருதமலை சாலை, முல்லைநகா் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தூய்மைப் பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

ஆய்வுப் பணியில், உதவி ஆணையா் சேகா், சுகாதார ஆய்வாளா் ராஜேந்திரன், மாநகராட்சி அலுவலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com