மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக கோவையில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.
கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக கோவையில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதையடுத்து அவரைக் கைது செய்யக்கோரி மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக கோவையில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா் மத்திய தந்தி அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அகில இந்திய எதிா்ப்பு தினம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

தொழிற்சங்க நிா்வாகிகள் வி.ஆனந்த், பி.சண்முகம், கே.எம்.செல்வராஜ், டி.எஸ்.ராஜாமணி, எஸ்.கிருஷ்ணமூா்த்தி, மு.தியாகராஜன், க.பாலசுப்ரமணியன், ரகுபுநிஸ்தாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com