இயற்கை வள சுரண்டல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: அா்ஜுன் சம்பத்

இயற்கை வள சுரண்டல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளாா்.
இயற்கை வள சுரண்டல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: அா்ஜுன் சம்பத்
Updated on
1 min read

இயற்கை வள சுரண்டல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளாா்.

இந்து மக்கள் கட்சி சாாா்பில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இயற்கை வள சுரண்டல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழக நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு இந்து மக்கள் கட்சி ஜனநாயக முறையில் போராடும். ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், ஊழல் செய்தவா்கள் சிறைக்குச் செல்ல வேண்டும். மது இல்லா தமிழகம், மகிழ்ச்சியான தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது மது என்று தெரிந்தும் கூட தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவராதது வேதனை அளிக்கிறது.

மணல் கொள்ளையா்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தால் முறப்பநாடு கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் தமிழக அரசு அதை கைவிட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com