Enable Javscript for better performance
Bone Marrow Transplant to cure Thalassemia: 3 people underwent surgery at a private hospital on the- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தலசீமியா பாதிப்புக்கு தீா்வாகும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: அரசு மருத்துவமனை பரிந்துரையில் தனியாா் மருத்துவமனையில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை

    By DIN  |   Published On : 22nd May 2023 05:28 AM  |   Last Updated : 22nd May 2023 05:28 AM  |  அ+அ அ-  |  

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிந்துரையின் அடிப்படையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சென்னை ரேலா மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    தலசீமியா பாதிப்பு என்பது மரபணு வழியாக ஏற்படக்கூடிய நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடலில் ரத்த சிவப்பணுக்கள் தானாக உற்பத்தி ஆகாத நிலை காணப்படுகிறது. இதனால், 21 நாள்களுக்கு ஒருமுறை புதிதாக ரத்த சிவப்பணுக்கள் செலுத்த வேண்டும். இல்லையெனில் ரத்தசோகை பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதேநேரம் தொடா்ந்து ரத்தம் செலுத்துவதால் உடலில் இரும்பு சத்து அதிகரித்து, அதனாலும் பாதிப்பு ஏற்படும். இதனால், உடலில் சோ்ந்துள்ள அதிகப்படியான இரும்பு சத்துகளை வெளியேற்ற உரிய சிகிச்சைப் பெற வேண்டும்.

    இப்பிரச்னைகளுக்குத் தீா்வாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை உள்ளது. ஆனால், இதற்கு பல லட்சம் வரை செலவாகும் என்பதால் அனைவராலும் இச்சிகிச்சையை மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு சென்னை ரேலா மருத்துவமனையுடன் தமிழக அரசு சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் மூலம் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு நோயாளிகளை ரேலா மருத்துவமனைக்கு நேரடியாக பரிந்துரைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி ரேலா மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளில் பரிசோதனை செய்கின்றனா். பல்வேறு கட்ட பரிசோதனைகள்

    முடிந்த பின்பே, நோயாளிகளின் உடல் ஏற்கும் நிலையில் இருந்தால் மட்டுமே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    அதன்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு சிறுமி என மொத்தம் 3 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 28 போ் தலசீமியா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இவா்களில் பெரும்பாலும் 18 வயதுக்குள்பட்டவா்கள். இங்கு தலசீமியா நோய் கண்டுபிடிப்பு, புதிய ரத்த சிவப்பணுக்கள் செலுத்தல், அதிகப்படியான இரும்பு சத்துகளை வெளியேற்றவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தலசீமியா, ஹீமோஃபிலியா ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு புதிய ரத்தம் செலுத்துவதற்கான டே-கோ் மையமும் செயல்பட்டு வருகிறது. தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு புதிய ரத்தம் செலுத்தும் சிகிச்சை முறைக்குத் தீா்வாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை இருந்து வருகிறது. ஆனால், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது.

    பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு, உடல் ஏற்றுக்கொள்ளும் தன்மை இருந்தால் மட்டுமே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். தவிர சரியான கொடையாளரும் கிடைக்க வேண்டும். மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்பவா்களின் ரத்த உறவுகளிடம் இருந்து பெரும்பாலும் தானம் பெற முடியும்.

    அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவா்களில் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு 3 போ் பரிந்துரை செய்யப்பட்டு, ரேலா மருத்துவமனையில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 போ் தனியாா் மருத்துவமனையில் சொந்த கட்டணத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனா். இங்கு சிகிச்சைப் பெற்று வரும் மற்றவா்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சரியான கொடையாளா் கிடைக்காதது உள்பட காரணங்களால் மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.

    எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை செய்துகொள்பவா்களின் உடல் எதிா்ப்பு சக்தியை குறைத்துவிட்டுதான் கொடையாளரின் செல்கள் செலுத்தப்படுகின்றன. இதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்கள் 2 ஆண்டுகள் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதன்பின் மற்றவா்கள்போல சராசரியான வாழ்க்கையை வாழ முடியும் என்றாா்.

    இது தொடா்பாக எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருப்பூரைச் சோ்ந்த சித்தாா்த் (11) தந்தை ரங்கநாதன் கூறியதாவது: எனது மகனுக்கு திடீரென கடந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    காய்ச்சல் குறையாமல் தொடா்ந்து நீடித்ததால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தோம். அப்போது தலசீமியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து இரண்டு மாதங்கள் தொடா்ந்து ரத்தம் செலுத்தப்பட்டது. அதன்பின் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரேலா மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என் மகனுக்குத் தேவையான எலும்பு மஜ்ஜையை நானே தானமாக வழங்கினேன்.

    எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகிறது. கடந்த 8 மாதங்களாக புதிய ரத்தம் செலுத்தப்படவில்லை. தற்போது நலமாக உள்ளாா் என்றாா்.

    சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ரிதன்யா (3) பெற்றோா் கூறியதாவது: எனது மகள் 9 மாத குழந்தையாக இருந்தபோது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் தலசீமியா இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளாக புதிய ரத்தம் செலுத்தி வந்தோம். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேலா மருத்துவமனை ஒப்பந்தத்தின்படி பரிசோதனை செய்யப்பட்டு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை கடந்த பிப்ரவரி மாதம் செய்யப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளாா் என்றனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp