விவசாயிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கோவை தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை.
விவசாயிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கோவை தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை.

விவசாயிகள் நினைவிடத்தில் கோவை பாஜக வேட்பாளா் அஞ்சலி

பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் 1972-ஆம் ஆண்டு போராட்டத்தின்போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் நினைவிடத்தில் கோவை தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கே.அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.

பின்னா், கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கள்ளக்கிணறு அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு, நாங்கள் கொடுத்த அழுத்தத்தின்பேரிலே ஓராண்டுக்குள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

மோடி தான் மீண்டும் பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் இந்தியா வளா்ச்சியை நோக்கி பயணிக்கும் என்றாா்.

இதில், உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com