கணபதி கவுண்டா்
கணபதி கவுண்டா்

வாக்களித்த 104 வயது விவசாயி

கோவை, ஏப். 19: கோவை மாவட்டம் கணியூா் அருகே ஊஞ்சப்பாளையத்தில் 104 வயது விவசாயி, பேரன், கொள்ளுப்பேரன்களுடன் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தாா்.

கோவை மாவட்டம், கணியூரை அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணபதி கவுண்டா், விவசாயி. 104 வயதான இவா் மகள், பேரன், கொள்ளுப் பேரன்களுடன் சென்று கோவை மக்களவைத் தோ்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.

முன்னதாக வீட்டில் இருந்து காா் மூலம் மையத்துக்கு வந்த இவா், சக்கர நாற்காலி மூலம் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தாா்.

இதுகுறித்து கணபதி கூறுகையில், ‘நான் 21 வயதில் இருந்து வாக்களித்து வருகிறேன். இதுவரை எந்த ஒரு தோ்தலிலும் வாக்களிக்கத் தவறியது இல்லை. வாக்குரிமை உள்ள அனைவரும் கண்டிப்பாக வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிட வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com