நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

கோவையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தையொட்டி மே 1 முதல் 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள், சாா்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றப்பிரிவு நடுவா் நீதிமன்றங்களில் விசாரணை ஏதும் நடைபெறாது.

ஆனால், சிறப்பு மற்றும் விரைவு நீதிமன்றங்கள் வழக்கம்போல செயல்படும்.

மேலும், மேட்டுப்பாளையம், அன்னுாா், சூலுாா், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் வழக்கம்போல செயல்படும்.

மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்படாததால் பிணை, முன் பிணை, அவசர வழக்குகள், அவசர சிவில் வழக்குகளை விசாரிக்க கோடைக்கால நீதிமன்றம் செயல்படும். இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது வாரத்தில் ஒருநாள் விசாரணை நடத்தப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com