வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

கோவையில் வடமாநில இளைஞரைத் தாக்கி கைப்பேசி, பணம் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, புரூக்பாண்ட் சாலையில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அனூப் (25) செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவரை வழிமறித்த சிலா், அவரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து கைப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினா்.

காயத்துடன் சாலைக்கு ஓடிவந்வரை அவ்வழியே சென்றவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com