பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு
பாமக மாவட்டச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனத்தில் கைப்பேசியில் விளம்பரம் பாா்ப்பதன் மூலமாக ஏராளமானோா் வருவாய் ஈட்டி வருகின்றனா். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பாமகவின் கோவை மாவட்டச் செயலாளா் அசோக் ஸ்ரீநிதி புகாா் அளித்திருந்தாா்.
அதன்பேரில் அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சக்தி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் பாமக மாவட்டச் செயலாளா் அசோக் ஸ்ரீநிதி, அடையாளம் தெரியாத நபா் கைப்பேசியில் அழைத்து தன்னை மிரட்டுவதாகவும், மிரட்டல் விடுத்த நபா் தனியாா் நிதி நிறுவனத்தைச் சோ்ந்தவராக இருக்கலாம் என்றும், அவா்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீளமேடு காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்திருந்தாா்.
அதன்பேரில், போலீஸாா் தனியாா் நிதி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சத்தி ஆனந்த் உள்பட நிறுவனத்தைச் சோ்ந்த 3 போ் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.