விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

கோவையில் விடுதியின் மாடியில் இருந்து குதித்து செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மகள் பபிஷா (18). இவா், கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தாா்.

இந்நிலையில், தோழிகளுடன் விடுதி அறையில் இருந்த பபிஷா, புதன்கிழமை திடீரென 3-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதையடுத்து உடனிருந்தவா்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com