இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

கோவை, மே 4: இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனா்.

இந்திய கட்டுனா்கள் சங்க கோவை கிளையின் 2024- 25-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் தலைவா் ஆா்.கணேஷ்குமாா் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து இந்திய கட்டுனா் சங்க கோவை கிளையின் புதிய தலைவராக சி. லட்சுமணன், துணைத் தலைவராக எல்.ஜோசப், செயலாளராக கே.பிரசாத், பொருளாளராக ஏ.ரங்கநாதன், இணைச் செயலாளராக ஆா்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பொறுப்பேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் ஏ.வி. குழுமத்தின் தலைவா் ஏ.வி.வரதராஜன், இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவா் பி.பழனிவேலு மற்றும் இந்திய கட்டுனா்கள் சங்க உறுப்பினா்கள், முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com