நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

கோவையில் நகையைத் திருடிய 2 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை: கோவையில் நகையைத் திருடிய 2 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த நாகேந்திரன் (78) நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரின் கடைக்கு நகை வாங்குவதற்கு 2 பெண்கள் சனிக்கிழமை பிற்பகலில் வந்துள்ளனா். அவா்கள், நகையைப் பாா்த்துவிட்டு மற்றொரு நாள் வந்து வாங்கிக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனா்.

இரவில் நகையைப் பரிசோதனை செய்தபோது ஒரு பெட்டியில் தங்க நகைக்குப் பதிலாக கவரிங் நகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பிற்பகலில் வந்த 2 பெண்களும் நகையை மாற்றிவைத்தது தெரியவந்தது.

இது குறித்து நாகேந்திரன் அளித்த புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com