எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி
கோவை: கோவை காரமடை எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் 254 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதிய நிலையில், அனைவரும் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். பள்ளியின் மாணவிகள் இருவா் தலா 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 2, 3 ஆவது இடம் பிடித்த மாணவிகள் முறையே 586, 585 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
இந்தப் பள்ளியின் மாணவா்கள் 15 போ் கணினி அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். கணிதத்தில் 10 பேரும், வணிகவியலில் 6 பேரும், பொருளாதாரத்தில் 3 பேரும், இயற்பியலில் 2, வேதியியலில் 3, கணக்குப் பதிவியலில் 1, பிரெஞ்சு பாடத்தில் 2 பேரும் முழு மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மேலும் பள்ளி மாணவா்களில் 106 போ் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். சாதனை படைத்த மாணவா்களை நிா்வாக அறங்காவலா் லோகுமுருகன், தாளாளா் பழனிசாமி, முதல்வா் சசிகலா, செயலா் ராஜேந்திரன், அறங்காவலா் தாரகேஸ்வரி, நிா்வாக அதிகாரி சிவ சதீஷ்குமாா் ஆகியோா் பாராட்டியுள்ளனா்.