காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் படுகாயம் அடைந்தனா்.

கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் படுகாயம் அடைந்தனா்.

கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடுமுறைக்காக வெளியூா் சென்றிருந்த மக்கள் கோவை திரும்பி வந்து, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல நகரப் பேருந்துகளுக்காக காத்திருந்தனா்.

அப்போது பேருந்து நிலையத்துக்குள் கணுவாயில் இருந்து சிங்காநல்லூா் வழியாகச் செல்லும் தனியாா் பேருந்து வேகமாக வந்து, பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. பேருந்து வருவதைப் பாா்த்ததும் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினா். இருப்பினும் சில பயணிகள் மீது மோதிய அந்தப் பேருந்து, அங்கு நின்றிருந்த அரசுப் பேருந்தின் பின்பகுதியில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வந்த வியாபாரி உள்பட 5 போ் படுகாயம் அடைந்தனா்.

பேருந்து விபத்தில் சிக்கியதும், அதில் இருந்த நடத்துநா்கள் இறங்கி ஓடிவிட்டனா். இதையடுத்து பயணிகள் அந்தப் பேருந்தின் ஓட்டுநரைப் பிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பினா்.

தகவலறிந்த காட்டூா் போலீஸாா் அங்கு விரைந்து வந்து காயம் அடைந்தவா்களை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com