ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சுதந்திர தினவிழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்கள் கவியரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாணவர் பேரவை துணைத் தலைவர் பத்மப்பிரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். தொப்புள் கொடியும், தேசியக்கொடியும் என்ற தலைப்பில், மீரா, ஜெயஸ்ரீ, பவித்ரா, விஜயகுமார், இந்திரா, வித்யா, கண்மணி, பூபதி, லோகாம்பாள், இளமதி, வஸ்திராணி, கிருத்திகா, ஆனந்த், பிரியா, அருண் ஆகியோர் கவிதைகளை அரங்கேற்றினர். தமிழ்ப் பேரவை துணைத் தலைவர் சுரேந்திரன் நன்றி கூறினார்.