மண்டல அளவிலான கேரம் போட்டியில் கவுந்தப்பாடி ஈ.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 3-ஆம் இடம் பிடித்தனர்.
மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான கேரம் போட்டி ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில், 12-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன.
இப்போட்டியில், ஈ.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்த வைத்தீஷ்வரன், பாஷீத், ஆகாஷ், மாரிமுத்து ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பெற்றனர். இம்மாணவர்களை கல்லூரித் தலைவர் யு.என்.முருகேசன், தாளாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் எல்.பூபதி, துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.