மண்டல கேரம் போட்டி: ஈஐடி பாலிடெக்னிக் மாணவர்கள் 3-வது இடம்

மண்டல அளவிலான கேரம் போட்டியில் கவுந்தப்பாடி ஈ.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 3-ஆம் இடம் பிடித்தனர்.

மண்டல அளவிலான கேரம் போட்டியில் கவுந்தப்பாடி ஈ.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 3-ஆம் இடம் பிடித்தனர்.
 மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான கேரம் போட்டி ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில், 12-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன.
 இப்போட்டியில், ஈ.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்த வைத்தீஷ்வரன், பாஷீத், ஆகாஷ், மாரிமுத்து ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பெற்றனர். இம்மாணவர்களை கல்லூரித் தலைவர் யு.என்.முருகேசன், தாளாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் எல்.பூபதி, துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com