பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தைக் கண்டித்து ஈரோடு ரயில் நிலையத்தில் மறியல் செய்ய முயன்ற மனித நேய மக்கள் கட்சியினர்150 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கட்சியின் மாவட்டச்செயலர் சபீக்அலி தலைமையில், பொருளாளர் முகமது அலி முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஈரோடு காளை மாடு சிலை அருகே திரண்டனர். இதையடுத்து இப் பகுதியிலிருந்து கோரிக்கை முழக்கமிட்டபடி ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர்.
ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே சென்றபோது, நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜ்குமார், சேகர் உள்பட 50 -க்கும் மேற்பட்ட போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து 150 பேரை கைது செய்தனர்.