கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணி தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி பேசினார்.
மாவட்டத் துணைத் தலைவர்கள் கே.ஆர்.செல்வராஜ், ஜே.முருகேசன், மாவட்ட பொதுச் செயலர் தா.ந.சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேபி நகரச் செயலர் ஸ்ரீதரன் வரவேற்றார்.
கோபி, சத்தியமங்கலம், பவானி, நம்பியூர், அந்தியூர், பர்கூர், டி.என்.பாளையம், கவுந்தப்பாடி, அத்தாணி, அம்மாப்பேட்டை, புளியம்பட்டி, பவானிசாகர், திங்களூர், பவானி மற்றும் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.