கொடுமுடி வட்டார அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகளில், பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், நவரசம் பள்ளி மாணவ, மாணவிகள் குழு, தடகளப் போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிளாலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தடகளப் போட்டியில், 32 பள்ளி மாணவர்கள் விளையாடியதில் நவரசம் பள்ளி மாணவர்கள் கார்த்திக் பிரசாத் இளையோர் பிரிவிலும், மிதுன்ராகுல் மூத்தோர் பிரிவிலும் தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 102 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர். தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக இப்பட்டத்தை வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் பழனிசாமி, பொருளாளர் பொன்னுவேல், முன்னாள் பொருளாளர் கோவிந்தசாமி, துணைப் பொருளாளர் சின்னுசாமி உள்ளிட்டோர் பாராட்டினார்.