பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 54.86 லட்சம் வசூலானாது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் காணிக்கை அளிக்க வசதியாக, மகா மண்டபம், குண்டம் பகுதி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள சருகு மாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு இடங்களில் 19 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாதம் ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படும்.
ஜூலை மாத உண்டியல் திறப்பு, அறநிலையத் துறையின் பண்ணாரி துணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ரொக்கமாக ரூ. 54 லட்சத்து 68 ஆயிரத்து 431 இருந்தது. மேலும், தங்கம் 485 கிராமும், வெள்ளி 737 கிராமும் இருந்தன.
உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் உதவி ஆணையர் ஹர்ஷினி, கோயில் அறங்காவலர்கள், பணியாளர்கள், சத்தி தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.