பெருந்துறை தாலுகாவுக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், எலும்பு மூட்டு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.1,500 மாதாந்திர உதவித் தொகை பெறவும், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கும் பதிவு செய்யப்பட்டது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.