ஈரோடு
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள படை வீரர்கள் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமை வகித்தார். ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நல்லசாமி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் புவனேஸ்வரி, விவசாயிகள் பிரிவு மாவட்டத் தலைவர் பெரியசாமி, மாவட்ட முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாஷா உள்பட திரளானோர் பங்கேற்றனர்.