பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் சாய, தோல் ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சார்பில், பனியம்பள்ளி ஊராட்சி, துலுக்கம்பாளைம் மாரியம்மன் கோவில் திடலில் விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கந்தசாமி, பொன்னையன், பனியம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுமார், சென்னிமலை ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஆகியோர், சிப்காட் ஆலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் விளக்கிப் பேசினர்.