கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் 50 சிறப்புப் பேருந்துகள் வியாழக்கிழமையிலிருந்து 2நாள்களுக்கு இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை விமர்சையாக நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 22, 23 ஆகிய 2 நாள்களுக்கு ஈரோடு மண்டலம் சார்பில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய ஊர்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 50 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்.