மொடக்குறிச்சி தாலுகா, அறச்சலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
அறச்சலூர் அருகே மாப்பிள்ளை பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (49), பெயிண்டர். நண்பரைப் பார்க்கச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புதன்கிழமை சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மனைவி, உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலம் மிதந்து கொண்டிருப்ஸ்பதாக கிடைத்த தகவலையடுத்து சென்று பார்த்தபோது, உயிரிழந்தது முருகேசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்த அறச்சலூர் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சரவணன் (27), சதீஸ் ((21) என்ற மகன்களும் உள்ளனர்.