ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை வகித்தார். இதில், 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 14) காலை 9 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, அக்டோபர் 14 இல் அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அத்தாணி எஸ்.எம்.பி. மஹாலில் காலை 9 மணிக்கும், பகல் 1 மணிக்கு பவானி தொகுதியில் அனுசுயா பிரசவ விடுதி அருகே உள்ள சந்திரா முத்துவேல் அரங்கிலும், பிற்பகல் 3 மணிக்கு பவானிசாகர் தொகுதியில் சத்தியமங்கலம், கோபி பிரதான சாலையில் உள்ள செட்டிநாடு ரெஸ்டாரண்ட் அரங்கிலும், மாலை 5 மணிக்கு கோபி தொகுதியில் அரசு மருத்துவமனை அருகே அன்பு மஹாலிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டங்களில், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.