சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை வழியாக தமிழகம், கர்நாடகத்துக்கு 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாளவாடியில் இருந்து மதுரைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிக் கொண்டு லாரி திம்பம் மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்து.
அப்போது, 26 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது முன் சக்கரம் குழியில் இறங்கியதால், லாரியை இயக்க முடியவில்லை. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப் பாதையின் இருபுறமும் நின்றது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஓட்டுநர், வாகன ஓட்டிகள் குழியில் இறங்கிய லாரியை மீட்டனர்.