மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, மணல்மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கிழக்கு, மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம் பகுதிக்கான நிர்வாகிகள், வாக்குச் சாவடிக் குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமசந்திரன், மூத்த வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று மக்களவைத் தேர்தலில் திமுக அதிக வாக்குளைப் பெறும் வழிமுறைகள், களப் பணிகள் குறித்து ஆலோசனை தெரிவித்தனர்.
இதில், மாநில நிர்வாகிகள் சந்திரகுமார், சச்சிதானந்தம், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.