ஈரோடு புறநகர் மாவட்ட தீபா பேரவை செயலாளர் பூக்கடை சரவணன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்தனர்.
ஈரோடு புறநகர் மாவட்ட தீபா பேரவைச் செயலாளர் ஏ.பூக்கடை சரவணன். இவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் அணியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.
சத்தியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, டி.டி.வி. அணி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் தலைமை வகித்தார். இதில், நகரச் செயலாளர் டி.கே.ஈஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.