திம்பம் மலைப் பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர்.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நஞ்சகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தனது நண்பர்களான நடராஜ், வடிவேல், கார்த்திகேயன், வெங்கடாசலம் ஆகியோருடன் காரில் மைசூருக்கு சென்றுவிட்டு திம்பம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
திம்பம் 26 ஆவது வளைவில் கார் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த 5 பேரும் காயமடைந்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து, ஆசனூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.