அறச்சலூர் அருகே மின் கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.50 மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.
அறச்சலூரை அடுத்த தச்சங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வனசேகர் (45). இவர் சிமெண்ட் அட்டை போட்ட வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதை அடுத்து வியாழக்கிழமை தீப் பிடித்து. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, துணி, சமையல் பாத்திரம் உள்ளிட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்தன. இதுகுறித்து அறச்சலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.