கோபி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழாவில் நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கோபி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழாப் போட்டி, கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டம் முழுவதுமிருந்து 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இந்த அறிவியல் நாடக விழா போட்டியில், உடல்நலம், ஆரோக்கியம், தன்சுத்தம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குமுதா பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவிகள் நடித்த நடாகம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பரிசை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், இணைத் தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலாளர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.