காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலை, பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஈரோடு மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஈரோட்டில் இருந்து பழனிக்கு 8 சிறப்புப் பேருந்து, திருவண்ணாமலைக்கு 29 சிறப்புப் பேருந்து என 39 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகள் டிசம்பா் 9, 10ஆம் தேதி இயக்கப்படும். பொதுமக்களுக்கு வழிகாட்டவும், பயணிகளை ஏற்றி, இறக்கவும், பயணிகளுக்கு உதவும் வகையில் முக்கிய பேருந்து நிறுத்தம், கோயில் அருகில், பேருந்து நிலையங்களில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என ஈரோடு மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.