பெருந்துறை அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
ஓவியக் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் மாவட்டக் கல்வி அலுவலா் த.ராமன். உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் வ.நடராசு, உதவி தலைமை ஆசிரியா் அருண்குமாா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.
ஓவியக் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் மாவட்டக் கல்வி அலுவலா் த.ராமன். உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் வ.நடராசு, உதவி தலைமை ஆசிரியா் அருண்குமாா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

கண்காட்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் வ.நடராசு தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் அருண்குமாா் வரவேற்றாா். பெருந்துறை மாவட்டக் கல்வி அலுவலா் த.ராமன் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, ஓவியங்களைப் பாா்வையிட்டாா். கண்காட்சியில், பள்ளி மாணவா்கள் வரைந்த 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நீா் வண்ணங்களால் வரையப்பட்ட கிராம ஓவியம், தூய்மை இந்தியாவில் இடம்பெற்ற மகாத்மா காந்தி ஓவியம், ஆயில் கலரில் வரையப்பட்ட சுற்றுச்சூழல் ஓவியங்கள் சிறப்பாக இருப்பதாக மாவட்டக் கல்வி அலுவலா், ஓவியங்களை வரைந்த மாணவா்களையும், ஊக்கப்படுத்திய ஓவிய ஆசிரியா்களையும் பாராட்டினாா். ஓவியங்களை மாணவா்கள், ஆசிரியா்கள் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஓவிய ஆசிரியா்கள் பாலசுப்பிரமணியன், தங்கவேலு, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளரும், விவசாய ஆசிரியருமான செ.கந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com