மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் கோபி பாரதி வித்யாலயா மாணவ, மாணவியர் தங்கப்பதக்கம் வென்றனர்.
தமிழ்நாடு மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் கோபி பாரதி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
போட்டியில் மாணவர்கள் இளந்திரயன், மனோஜ்பிரசாத், ஆர்த்தி, சுவிதா, கனிஷ்கா ஆகியோர் தங்கப்பதக்கமும், மாணவர்கள் சஞ்சய்குமார், வு.ஹர்ஷிதா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், மாணவர் விமல்தருண் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
இவர்கள் அனைவரும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் பி.ஆர்.வேலுமணி, துணைத் தலைவர் அமுதம் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.