தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 23 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (19-2-19) முதல் 21-ஆம் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
கோவையில் நடைபெறும் முதல் சுற்று போட்டிக்கான ஈரோடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வீரர்கள் பின்வருமாறு:
என்.நவீன்குமார் (அணித் தலைவர்), எம்.நவநீதகிருஷ்ணன், க. தேவராஜன், ஈ. கோகுல், எம்.அஜீத்குமார், எடீ. அரவிந்தகுமார், ஆர்.கார்வேந்தன், பி.கிஷோர், ஆர். நிஷார் அகமது, எம். யுவராஜ், எஸ். தீபக்.
அணி மேலாளராக எம்.சந்துரு பணியாற்றுவார். இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் ஏ.ஜாபர் ஆசிக் அலி தெரிவித்துள்ளார்.