கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட அரிக்கான்காட்டூரில் தார் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ள நிலையில், அதை புதுப்பிக்க வேண்டி அப்பகுதி மக்கள் பலமுறை மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணியிடம் மனு அளித்திருந்தனர்.
தற்போது, நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணியை எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், கொடுமுடி அதிமுக ஒன்றிய உறுப்பினர் புதூர் கலைமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பூரணம் கதிரழகன், பள்ளி கட்டட கழகத் தலைவர் பெரியசாமி, பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.