பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலையில் இருந்து இரவு 10 மணி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னிமலை பகுதியில் 27.6 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. மழையால், தாழ்வானப் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பெருந்துறை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷன நிலை நிலவியது.