கோபி அருகே கார் விபத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர், அவரது மனைவி காயமடைந்தனர்.
கோபி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணசாமி (56). இவர் தனது மனைவி மல்லிகாவுடன் (50), காரில் கோபிக்கு வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தார். குன்னத்தூர் - கோபி சாலையில் வந்தபோது பூச்சநாயக்கன்பாளையம் பகுதியில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.