ஈரோடு
நெரிஞ்சிப்பேட்டையில் 118 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்
பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின்
பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை ரேணுகாதேவி தலைமை வகித்தார். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர் 117 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
இதில் அம்மாப்பேட்டை ஒன்றிய அதிமுக செயலர் வி.எஸ்.சரவணபவா, துணைச் செயலர் மு.லட்சுமணன், நிலவள வங்கித் தலைவர் யு.எஸ்.சுந்தரராசன், நெரிஞ்சிப்பேட்டை பேரூர் செயலர் எஸ்.மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.