திருமுறை திருக்காவனம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம் சார்பில் ஞாலம் அளந்த பன்னிரு திருமுறை முற்றோதல் இன்னிசைப் பெருவிழா ஈரோடு ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், அரிகர தேசிக சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். சிவனடியார்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஓதுவார் மூர்த்திகளும் விழாவில் பங்கேற்று 63 நாயன்மார்களில் முதன்மையான நால்வர்களான, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களைப் பாடி அதற்கான விளக்கம் அளித்தனர்.
மாதம் ஒரு முறை நடக்கும் இந்த ஆன்மிக நிகழ்வில் ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள், சிவபக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.