ஈரோட்டில் மே தினக் கொண்டாட்டம்

ஈரோட்டில் பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

ஈரோட்டில் பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கூட்டமைப்புச் செயலாளர் முஹமது இஸ்மாயில் தலைமை வகித்தார். 
தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மே தினக் கொடியை ஏற்றினார். விழாவில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் விஜயகுமார், அசோக்குமார், சண்முகவடிவு, விஜயா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அமைப்புச் செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார். 
இதேபோல, பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தொழிற்சங்கப் பொறுப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். 
மாவட்டச் செயலாளர் முனியப்பன் வரவேற்றார். கெளரவத் தலைவர் ஆறுமுகம் கேக் வெட்டி தொழிலாளர்களுக்கு வழங்கினார். 
மாநில துணைத் தலைவர் வெங்கடாசலம் தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து, உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டன. 
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருள்மொழி, ராஜேந்திரன், இளைஞர் சங்க மாநில துணைச் செயலாளர் சசிகுமார், கெளதம் தமிழ்மணி, கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், பழனிசாமி, ஐயப்பன் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com