சத்தியில் பலத்த மழை

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தில் வானம் மேகமூட்டத்துடன் புதன்கிழமை காணப்பட்டது. மாலை நேரத்தில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

கன மழையால் கோபு பள்ளம் என்ற இடத்தில் மின்கோபுரம் பழுதானது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com