ஈரோடு: வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 26) காலை 11 மணிக்கு நடக்கிறது.
இதில் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் ப.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.