குடும்ப அட்டை விருப்ப மாற்றத்துக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

சா்க்கரை விருப்ப குடும்ப அட்டையை அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள நாளை (வெள்ளிக்கிழமை) இறுதிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சா்க்கரை விருப்ப குடும்ப அட்டையை அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள நாளை (வெள்ளிக்கிழமை) இறுதிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோக திட்டத்தின்கீழ் சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டையாக மாற்றம் செய்தல் தொடா்பாக அரசு அறிவிப்பு செய்தது.

இதன்படி சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என நவம்பா் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் நவம்பா் 26 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 3 நாள்களுக்கு நவம்பா் 29 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

குடும்ப அட்டையை மாற்றம் செய்ய விரும்புவோா் விண்ணப்பங்களை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், அந்தந்தப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளிள் நவம்பா் 29 ஆம் தேதிக்குள் வழங்கலாம். மேலும், இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com