பாரியூர் கோயில் உண்டியல் காணிக்கை  ரூ.17.25 லட்சம்

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம் பாரியூரில் அமைந்துள்ள அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.17.25 லட்சம் வரப்பெற்றது. 

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம் பாரியூரில் அமைந்துள்ள அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.17.25 லட்சம் வரப்பெற்றது. 
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் வியாழக்கிழமை நடைபெற்றது. 
குண்டம் தேர்த் திருவிழா சமயத்தில் வைத்திருந்த 4 தற்காலிக உண்டியல்கள் மற்றும் 10 நிரந்தர உண்டியல்கள் என 14 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில் ரூ.17.25 லட்சம் ரொக்கம்,  தங்கம் 144 கிராம், வெள்ளி 117 கிராம், அமெரிக்க டாலர் 3 நோட்டுகள், மலேசியா நோட்டுகள் 2, சிங்கப்பூர் டாலர் ஒன்று ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
காணிக்கை எண்ணும் பணியில் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com