ஆடிப்பூரம்: வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஈரோடு மாநகராட்சி 41 ஆவது வார்டு அண்ணா நகரில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

ஈரோடு மாநகராட்சி 41 ஆவது வார்டு அண்ணா நகரில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
விழாவையொட்டி அதிகாலை, மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வளையல் அலங்காரமும் மகா தீபாரானையும் நடந்தது.  
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த 4 கர்ப்பிணிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், வளைகாப்பு நடத்தப்பட்டு 7 வகையான உணவு மற்றும் பதார்த்தங்கள் வழங்கப்பட்டன.
 கோயிலுக்கு வந்த பக்தர்கள், கர்ப்பிணிகளுக்கு அட்சதையிட்டு ஆசீர்வதித்தனர். நிறைவில் அனைவருக்கும் வளையல் மற்றும் கோயில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகி மலர் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com