விதிகளை மீறிய 262 பேர் மீது வழக்கு: ரூ. 82 ஆயிரம் அபராதம் வசூல்

ஈரோட்டில் ரயில்வே விதிகளை மீறிய 262 பேர் மீது ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து அபராதமாக ரூ.82 ஆயிரம் வசூலித்தனர். 

ஈரோட்டில் ரயில்வே விதிகளை மீறிய 262 பேர் மீது ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து அபராதமாக ரூ.82 ஆயிரம் வசூலித்தனர். 
ரயில்வே விதிகளை மீறுவோர் மீது ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப்  பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் ஓடும் ரயிலில் அனுமதியின்றி வியாபாரம் செய்தவர்கள், தண்டவாளத்தை கவனமின்றி கடக்க முயன்றவர்கள் பயணிகளுக்கு இடையூறு செய்தவர்கள் என 108 பேர் மீதும் ரயில் நிலையங்களை அசுத்தம் செய்த 154 பேர் என மொத்தம் 262 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
அவர்களிடம் இருந்து ரூ. 82,700 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com